தமிழ்நாடு

பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் : அதிமுகவினர் மீது சோடாபாட்டில் வீச்சு

webteam

ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுகவினர் மீது சோடா பாட்டில் வீசப்பட்டது. 

ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக கூட்டணியினர் மீது சோடா பாட்டில் வீசி தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் உடையத்தேவர் பலத்த காயமடைந்து உள்ளார். பெரியபட்டினத்தில், அமைச்சர் மணிகண்டன் மற்றும் எம்பி அன்வர் ராஜா தலைமையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு சேகரிக்க சென்றிருந்தனர். 

அப்போது அமைச்சர் முன்னிலையில் இச்சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். சோடாபாட்டில் வீசிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தங்கள் கூட்டணிக்கு எதிரானவர்களே இந்தச் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளதாக பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.