தமிழ்நாடு

மாநகராட்சிப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்

webteam

மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக சாம்சங் நிறுவனமும் தமிழக அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, எம்.சி. சம்பத் ஆகியோருடன் சாம்சங் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர். ஒப்பந்தப்படி, முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியின் 20 மேல்நிலை பள்ளிகள் மற்றும் 8 நடுநிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.