செல்வகுமார் pt web
தமிழ்நாடு

சிவகங்கை | பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை.. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்!

PT WEB

சிவகங்கையை அடுத்துள்ள வேளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து வருவதோடு செங்கல் சூளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் நேற்று இரவு வீட்டிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் சாத்தரசன் கோட்டை நோக்கி செல்லும்போது வழிமறித்த ஒரு கும்பல் செல்வகுமாரை அறிவாளால் வெட்டியது. இதனால் சம்பவ இடத்திலேயே செல்வக்குமார் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்வகுமாரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை கொலை செய்யப்பட்ட செல்வகுமாரின் உறவினர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் குற்றவாளிகளை கைது செய்ய கோரி, அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். காவல்துறையினரின் சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து மறியலை கைவிட்டு களைந்தனர்.