தமிழ்நாடு

மத்திய அமைச்சர் மீது காலணி வீச்சு

Rasus

முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேட்டி கொடுக்க நின்றபோது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லியில் மரணமடைந்த ஜே.என்.யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல், அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அரிசிபாளையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவர் உடலுக்கு ஏரளாமனவர்கள் அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் அவரை நோக்கி காலணியை கொண்டு எறிந்தார். அது தொலைக்காட்சிகள் சார்பில் நீட்டப்பட்டிருந்த மைக்குள் மீது விழுந்தது. போலீசார் காலணி வீசியவரை விரட்டிப் பிடித்தனர். அவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.