தமிழ்நாடு

பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தற்காலிக பணியாளர் பணிநீக்கம்

webteam

குழந்தையின் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓமலூர் அரசு மருத்துவமனையின் தற்காலிக பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வருபவர் யோகானந்த். தற்காலிக பணியாளரான இவர் மீது ஏற்கனவே சில புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் குழந்தையின் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஆவேசமடைந்த கணவர் மற்றும் பொதுமக்கள் யோகானந்தை தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் புகாரில் சிக்கிய தற்காலிக ஊழியர் யோகானந்தை உடனடியாக பணிநீக்கம் செய்து சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சத்யா உத்தரவிட்டார்.