தமிழ்நாடு

மெட்ரோ ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட்

Rasus

மெட்ரோ நிரந்தர ஊழியர்கள் 7 பேரை, பணி இடைநீக்கம் செய்து சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

விரைவான பயணத்திற்காகவும், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயிலில் நிரந்தர ஊழியர்கள், தனியார் ஒப்பந்த ஊழியர்கள் என பலர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர் என்ற முக்கிய பொறுப்பிற்கு தனியார் ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 7 பேரை மெட்ரோ நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இதுகுறித்து மெட்ரோ நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, பணி நேரத்தில் கவன குறைவாக இருந்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.