Selvaperunthagai pt desk
தமிழ்நாடு

விருதுநகர்: “காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்ய நினைத்தால்...” - செல்வப் பெருந்தகை ஆதங்கம்

webteam

செய்தியாளர்: A.மணிகண்டன்

விருதுநகர் தனியார் மண்டபத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம், எம்.பி மாணிக்கம் தாகூர் முன்னிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.

Selvaperunthaga

இந்த கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை... “எங்கு சென்றாலும் எல்லா மாவட்டங்களிலும் நம் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் உள்கட்சியில் நிலவும் பூசல்கள் மற்றும் குமுறல்களை வேதனைகளை கொட்டுகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எப்போது வலிமை பெறும் என நிர்வாகிகள் மத்தியில் பேசுபொருளாக இருந்து வருகிறது.

கடந்த 1967 வரை காங்கிரஸ் கட்சிதானே மற்ற கட்சிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தது... தற்போது பெறுகின்ற இடத்தில் இருப்பதாக எல்லா மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்களின் குரலாக இருந்து வருகிறது. என்றாவது ஒரு நாள் நமது கனவு நினைவாகும். காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்ய வேண்டும், சுயநலமாக இருக்க வேண்டுமென்றால் அந்த குடும்பமே வம்சமே விளங்காது.

Meeting

இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி பரிணாம வளர்ச்சி பெற வேண்டும் கட்சி கட்டமைப்பு வலுவாக இருந்தாலும், வாக்கு வங்கியை அதிகரிக்க பொறுப்பாளர்கள் முயற்சிக்க வேண்டும்” என்று கூறினார்.