தமிழ்நாடு

திருத்தணி அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு

webteam

திருத்தணி அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த எஸ்.வி.ஜி புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வம். அவரது மகள் பவித்ரா(16). இவர் ஆர்.கே.பேட்டை மகளிர் மேல் நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இன்று வீட்டிற்கு அருகில் உள்ள வயல் பகுதிக்கு விவசாய பணிகளை  செய்து விட்டு வீடு திரும்பும் போது, அவரை பாம்பு கடித்ததாக தெரிகிறது.

இதனையடுத்து பவித்ராவின்  குடும்பத்தினர் அவரை  உடனடியாக திருத்தணி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.