தமிழ்நாடு

எம்ஜிஆர், ஜெயலலிதாவைபோல் அதிமுகவை வழிநடத்துவேன் - வெளியான சசிகலா ஆடியோ

Sinekadhara

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுக எப்படி இருந்ததோ அதேபோல் அக்கட்சியை வழிநடத்த உள்ளதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக நிர்வாகியான தேனியை சேர்ந்த கர்ணன் என்பவருடன் சசிகலா பேசிய தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது. அதில் ஜெயலலிதாவின் தாயைவிட அவரை அதிக நாட்கள் பாதுகாத்ததே தமது பாக்கியம் என சசிகலா குறிப்பிட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு சிறைக்கு செல்வதற்குமுன் சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டி ஆட்சியை முறையாக அமைத்துக் கொடுத்துவிட்டுச் சென்றதை சசிகலா நினைவு கூர்ந்துள்ளார்.