தமிழ்நாடு

‘சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்: உதவியுடன் எழுந்து நடக்கிறார்’ - விக்டோரியா மருத்துமனை

kaleelrahman

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு நோய்த் தொற்று உறுதியானதால் விக்டோரியா மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சீராக உள்ளதாகவும் கொரோனா பாதிப்பு குறைந்து உதவியுடன் எழுந்து நடக்கிறார் என விக்டோரியா மருத்துமனை தெரிவித்துள்ளது.