தமிழ்நாடு

தென்காசி அருகே செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாள‌ர் மீது தாக்குதல் முயற்சி

தென்காசி அருகே செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாள‌ர் மீது தாக்குதல் முயற்சி

webteam

தென்காசி அருகே மணல் கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற புதிய தலைமுறை செய்தியாளர் மீது தாக்குதல் முயற்சி நடந்துள்ளது.

செங்கோட்டையை அடுத்த புளியரை சோதனைச் சாவடி வழியாக, கேரளாவுக்கு M-SAND கடத்தப்படுவதாக புதிய தலைமுறை செய்தியாளருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் மற்றொரு செய்தியாளருடன் அங்கு விரைந்துள்ளார். அப்போது, புளியரை சோதனைச்சாவடியில் நின்றிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், செய்தியாளர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், தாக்குதலும் நடத்த முயன்றுள்ளார். காவல்துறையினர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் விருதுநகர் அருகே செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இப்போது மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் செய்தியாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறதா என்ற கேள்வி எழும்புகிறது என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.