சாம்சங் நிறுவன ஊழியர்கள் முகநூல்
தமிழ்நாடு

பணிக்கு திரும்பிய சாம்சங் நிறுவன ஊழியர்கள்!

PT WEB

சாம்சங் நிறுவன ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, மீண்டும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்.

சிஐடியூ தொழிற்சங்க அங்கீகாரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் சாம்சங் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம், பேச்சுவார்த்தையால் திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில், அனைத்து தொழிலாளர்களும் வழக்கம் போல் இன்று பணிக்கு திரும்பி உள்ளனர். தொழிற்சாலையின் நுழைவாயிலில் தொழிலாளர்களின் அடையாள அட்டையை சோதனை செய்த பிறகு அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.