தமிழ்நாடு

சேலம்: மின்சாரம் தாக்கி வயதான தம்பதியர் பரிதாபமாக உயிரிழப்பு - ஓமலூரில் சோகம்

சேலம்: மின்சாரம் தாக்கி வயதான தம்பதியர் பரிதாபமாக உயிரிழப்பு - ஓமலூரில் சோகம்

kaleelrahman

ஓமலூர் அருகே கோட்டமேட்டுப்பட்டி ஊராட்சியில் வயதான தம்பதியினர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கோட்டமேட்டுபட்டி ஊராட்சியில் உள்ள சின்ன அடைக்கனூர் கிராமத்தில் வசிப்பவர்கள் ராமலிங்கம் - லக்ஷ்மி தம்பதியினர். தனது மகனுடன் வசித்து வரும் இவர்கள் வீட்டில் உள்ள கேபிள் டிவி வயரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை அறியாத ராமலிங்கம் தனது துணியை துவைத்து கேபிள் டிவி வயர் மீது காயப்போடுள்ளார்.

அப்போது அந்த வயரில் பாய்ந்த மின்சாரம் அவரை தாக்கியுள்ளது. இதை பார்த்த அவரது மனைவி லட்சுமி, தனது கணவரை காப்பாற்றுவதற்காக அவரை பிடித்து இழுத்துள்ளார். அப்போது லட்சுமி மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தனர்.

இதையடுத்து தாய் தந்தையை காப்பாற்றச் சென்ற மகன் மீது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணவன் மனைவி இறந்த சம்பவம் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.