தமிழ்நாடு

விண்வெளி ஆராய்ச்சி பயிற்சி: ரஷ்யா செல்லும் அரசுப் பள்ளி மாணவர்

webteam

புதியதலைமுறை செய்தி எதிரொலியாக 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மைய பயிற்சி வகுப்புக்கு செல்ல நிதி உதவி கிடைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் நாராணாபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் ஜெயக்குமார், பட்டாசு ஆலை விபத்துகளை தவிர்க்கும் வகையிலான இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக பல்வேறு கண்காட்சியில் ‌பாராட்டுக்களை பெற்றுள்ளார். இதன் காரணமாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி விண்வெளி ஆராய்சி மைய பயிற்சி வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதற்கான பணம் இல்லாததால் அவரது ரஷ்ய பயணம் கேள்விக்குறியானது. இதுகுறித்து புதியதலைமுறை செய்தியாக வெளியிட்ட நிலையில், அந்த மாணவருக்கு ரஷ்யவாழ் தமிழர் விஜயகுமார் 2 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.