தமிழ்நாடு

15 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஆர் எஸ் எஸ் பேரணி

15 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஆர் எஸ் எஸ் பேரணி

webteam

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது.

தேச விடுதலைக்கு ‌பாடுபட்ட ராமானுஜர், குருகோவிந்த் சிங், அம்பேத்கர், நேதாஜி ஆகிய தலைவர்களை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்ச்சி ‌நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஆர் எஸ் எஸ் தொண்டர்கள், ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி பாந்தியன் சாலை வரை பேரணியாகச் சென்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு‌ம் பயனளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.