தமிழ்நாடு

சென்னையில் ரூ.3 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

webteam

சென்னை நந்தம்பாக்கம் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ன.

மணப்பாக்கம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அபோது அவ்வழியாக வந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டதில் அதில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்ததோடு காரில் வந்த இருவரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 40 சதவிகிதம் வரை கமிஷன் பெறுவதற்காக பழைய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்றதாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.