தமிழ்நாடு

மலைப்பாதையில் ராட்சத பாறை:போக்குவரத்து பாதிப்பு

webteam

மலைப்பாதையில் ராட்சத பாறை விழுந்ததினால் போக்குவரத்து பாதித்தது. இதனால் மக்கள் இயல்பு வாழ்கையை தொடர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் மலைப்பாதையில் மழை காரணமாக உருண்டு விழுந்த ராட்சத பாறை 15 நாட்களாகியும் அகற்றப்படவில்லை. இதனால் இரவில் பயணிக்கும் வாகனங்கள் பாறையில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்யும் இந்த சாலையில் உருண்டு விழக்கூடிய பாறைகள் அதிகளவில் இருப்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.