தமிழ்நாடு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதுரை ஆதீனம் கவலைக்கிடம்

kaleelrahman

சுவாசக்கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதுரை ஆதீனம் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை ஆதீன மடத்தின் 292வது குருமகா சன்னிதான பீடாதிபதியாக அருணகிரி என்பவர் இருந்து வருகிறார். இவர், சுவாசக்கோளாறு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் உடல் கவலைக்கிடமாக இருப்பதாக உடன் இருப்பவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.