தமிழ்நாடு

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

Veeramani
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
திருப்போரூர் மீன்மார்கெட் அருகே அமைந்துள்ளா 5.9 ஏக்கர் இடத்தை குத்தகைக்கு எடுத்த தனியார் நிறுவனம் குத்தகைக் காலம் முடிந்தமபின்னரும் நிலத்தை ஒப்படைக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அந்த நிலத்தை சாலையாக பயன்படுத்த முடியாதவாறு நிலத்திற்கு குறுக்கே பள்ளாம் தோண்டப்பட்டப்பட்டது. அந்த பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகையையும் வைக்கப்பட்டது.