தமிழ்நாடு

பேருந்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: ஓமலூரில் அவலம்

பேருந்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: ஓமலூரில் அவலம்

Rasus

ஓமலூர் அருகே பேருந்தில் வைத்து நள்ளிரவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் இருந்து ஓமலூர் அருகேயுள்ள நாரணம்பாளையம் கிராமம் வரை தனியார் பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த மணிவண்ணன், சேலம் உடையாப்பட்டி கிராமம் அதிகாரிப்பட்டியை சேர்ந்த முருகன், வாழப்பாடி அருகேயுள்ள முத்தம்பட்டியை சேர்ந்த பெருமாள் ஆகியோர் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில், பஸ்சில் குறைந்தளவிலான பயணிகள் மட்டுமே இருந்த நிலையில் பயணிகள் அனைவரையும் இறக்கி விட்ட ஓட்டுனர்கள் பேருந்தை நாரணம்பாளையத்தில் நிறுத்தியுள்ளனர். அப்போது பேருந்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி இருந்ததை பார்த்த அவர்கள், பேருந்தில் வைத்தே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி பேருந்தில் இருந்து இறங்கி அழுதுகொண்டே ஓடியுள்ளார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அந்த சிறுமியிடம் விசாரித்துள்ளனர். பின்னர் நடந்தது குறித்து சிறுமி கூறியதை தொடர்ந்து கிராம மக்களை ஒன்று திரட்டிய இளைஞர்கள், அவர்கள் மூவரையும் பிடித்தனர். பின்னர் ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மூவரையும் கைது செய்தனர். பின்னர் பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.