தமிழ்நாடு

“ரயில்வே தேர்வுகளை தமிழில் எழுதலாம்” - ரயில்வே வாரியம்

“ரயில்வே தேர்வுகளை தமிழில் எழுதலாம்” - ரயில்வே வாரியம்

webteam

ரயில்வே தேர்வுகளை தமிழில் எழுதலாம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

ரயில்வேயில் துறை சார்ந்த ஜிடிசிஇ (GDCE) தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ஜிடிசிஇ தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தலாம் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் ரயில்வே வாரியம் விளக்கமளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்த மு.க.ஸ்டாலின், தற்போது தமிழில் எழுதலாம் என்ற அறிவிப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.