தமிழ்நாடு

புதுக்கோட்டை: லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

kaleelrahman

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் புதுக்குடி என்ற இடத்தில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. ஐந்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் கோடியக்கரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு புதுக்குடி அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் வேனில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஐந்து பேர் படுகாயங்களுடன் மணமேல்குடி மற்றும் அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நாகப்பட்டிணத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருபவர்கள் என்றும் தற்போது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரும்பும் போது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் உயிரிழந்த கிளிட்டஸ் மற்றும் சேசுப்பிள்ளை ஆகியோர் மண்டபம் கேம்ப் பகுதியை சேர்ந்தவர்கள் ஆரோக்கியம் என்பவர் தங்கச்சிமடத்தை சேர்ந்தவராவார்.

சன்ராஜ், பிராங்கிளின், கிரீன் சன், ஜான்சன், பாக்கியராஜ் ஆகியோர் படுகாயங்களுடன் மணமேல்குடி மற்றும் அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.