தமிழ்நாடு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம்: தடை கோரி வழக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம்: தடை கோரி வழக்கு

Rasus

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ச‌ரவணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்நிகழ்ச்சியை குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவிற்கு ஆபாசமாக உள்ளதாகவும், டிஜிபி மற்றும் மத்திய-மாநில அரசிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரம் அவமதிக்கப்பட்டதாக கூறியுள்ள இசை வேளாளர் சங்கத்தினர், இதற்காக கமல், சக்தி ஆகியோர் ஒரு வாரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.