தமிழ்நாடு

வட கடலோர மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு

webteam

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் நாளை ப‌ல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
அடுத்துவரும் இரு தினங்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் ‌காரைக்காலின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் நிலவுகிறது. அதன் காரணமாக, அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நாளை வடகடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மழை அளவைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 13 சென்டி மீட்டரும் நாகையில் 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.