தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை - நாளை மறுநாள் தொடங்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு

webteam

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் நாளை மறுநாள் தொடங்குகிறது. இது தேதிகள் வாரியாக செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 8 மணி முதல் முன்பதிவுகள் தொடங்கும். அதன்படி ஜனவரி 10-ஆம் தேதி அன்று ஊருக்கு செல்ல நினைப்பவர்கள் நாளை மறுநாள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 11-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜனவரி 12-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 14-ஆம் தேதியும் முன்பதிவு செய்ய முடியும். 

ஜனவரி 13ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 15ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 16-ஆம் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதேபோன்று ஜனவரி 15-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 17-ஆம் தேதியும், ஜனவரி 16-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 18-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 17-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 19ஆம் தேதியும், ஜனவரி 18ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 20ஆம் தேதியும் முன்பதிவு செய்ய முடியும். மேலும், ஜனவரி 19ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 21-ஆம் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.