தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: ‌திருநாவுக்கரசுவிடம் ரகசிய இடத்தில் விசாரணை

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: ‌திருநாவுக்கரசுவிடம் ரகசிய இடத்தில் விசாரணை

webteam

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுவை, சிபிசிஐடி காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்களை துன்புறுத்தி ஆபாச படமெடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். அவரை 4 நாள் காவலில் எடுத்துள்ள சிபிசிஐடி அதிகாரிகள், தமிழக கேரள எல்லையில் உள்ள ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாக்கினாம்பட்டி, சின்னப்பம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகளுக்கு திருநாவுக்கரசுவை‌ அழைத்துச் சென்று‌, அங்கு விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி இதுவரை அவர் அழைத்துச் செல்லப்படவில்லை. பாலியல் விவகாரம் வெளியே தெரிந்ததும் தலைமறைவான திருநாவுக்கரசு, சுமார் 6 நாட்களாக திருப்பதியில் பதுங்கி இருந்தார். அதனால், அங்கு ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கலாம் என்பதால், திருநாவுக்கரசு திருப்பதி அழைத்துச் செல்லப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.