அன்புமணி ராமதாஸ் pt web
தமிழ்நாடு

“ரெட் அலர்ட்டாம்.. ஒரு சொட்டு மழ வரல” - வானிலை கணிப்பின் துல்லியம் குறித்து அன்புமணி அதிருப்தி!

PT WEB

வானிலை மையம் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்ததற்கு பாமக தலைவர் அன்புமணி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னைக்கு புதன்கிழமை ரெட் அலர்ட் பிறக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலை வரையில் ஒரு துளி கூட மழையைக் காணவில்லை. வானிலை நிலவரத்தை துல்லியமாக கணித்து தகவலை வெளியிட்டால் மட்டுமே, பொதுமக்களும், அரசாங்கமும் அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.