தமிழ்நாடு

சென்னை கீழ்ப்பாக்கத்தில் திடீர்ப் பள்ளம்

webteam

சென்னை கீழ்ப்பாக்கத்தில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பூந்தமல்லி - டெய்லர்ஸ் சாலையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இன்று காலை அந்தப் பகுதியில் 10 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளத்தை மூடும் பணியில் மெட்ரோ, மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி பள்ளத்தை சரி செய்தனர்.

ஏற்கனவே மெட்ரோ ரயில் பணி காரணமாக, ஜெமினி மேம்பாலம் அருகே பள்ளம் ஏற்பட்டிருந்தது. வண்ணாரப் பேட்டை பகுதியில் வீட்டுக்குள் சிமென்ட் கலவை வெளியேறி பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.