தமிழ்நாடு

திருப்பூர் அருகே டாஸ்மாக் கடை சூறை.. போர்க்களக் காட்சிகள்

Rasus

திருப்பூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களே கடையை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். கோரிக்கைக்கு யாரும் செவி சாய்க்காததால், ஆத்திரமடைந்த மக்கள், இன்று அந்தக் கடையை அடித்து நொறுக்கினர். கடையில் இருந்த மதுபாட்டில்களும் உடைக்கப்பட்டன. இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் மாறியது.