தமிழ்நாடு

தி.நகரில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பாதுகாப்புப் பணியில் காவல்துறை தீவிரம்

webteam

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை தியாகராயநகரில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால்  காவல்துறையினரின் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் சென்னை தி.நகரில் மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். இதனால் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் எளிதாக சாலையை கடக்க, சாலை சந்திப்புகளில் காவலர்கள் பணியில் உள்ளனர். 400க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தப்படுகிறது. இறுதி நாட்களில் மேலும் கண்காணிப்பு பணியை அதிகரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.