தமிழ்நாடு

ஆ.ராசாவின் உருவபொம்மையை எரிக்க முயற்சி: ராமநாதபுரத்தில் திமுக -அதிமுகவினர் கடும் மோதல்!

ஆ.ராசாவின் உருவபொம்மையை எரிக்க முயற்சி: ராமநாதபுரத்தில் திமுக -அதிமுகவினர் கடும் மோதல்!

Veeramani

ராமநாதபுரத்தில் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவருக்கொருவர் எதிராக கோஷம் எழுப்பி, மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாகக்கூறி ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் அதிமுகவினர், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் ஆ.ராசாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், ஆ.ராசாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். இதற்கு எதிராக திமுகவினர் ஒன்றுகூடி அதிமுகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதன்பின்னர் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவருக்கொருவர் எதிராக கோஷங்களை எழுப்பிக்கொண்டதுடன், செருப்பு மற்றும் அழுகிய காய்கறிகளை வீசி தாக்குதல் நடத்திக்கொண்டனர். இதனால் இப்பகுதியில் காலைமுதலே கடும் பரபரப்பு நிலவியது, இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.