தமிழ்நாடு

ஜிஎஸ்டிக்கு ஒரே நாடு ஒரே வரி; தண்ணீர் என்றால் வெவ்வேறா?- ஓ.எஸ்.மணியன்

webteam

ஜிஎஸ்டி வரி பெறுவதற்கு ஒரே நாடு,‌ ஒரே வரி என்று கூறிய மத்திய அ‌ரசு, தண்ணீர் தரும்போது மட்டும் கர்நாடகம் வேறு, தமிழகம் வேறு என பிரித்து பார்ப்பது நியாயமா என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மேலா‌ண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நாகையில் உள்ள அவுரி திடலில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான அதிமுகவினர் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த ஓ.எஸ். மணியன், ஜிஎஸ்டிக்கு ஒரே நாடு ஒரே வரி எனக்கூறும் மத்திய அரசு, தண்ணீர் என்று வரும்போது மட்டும் வேறுபாடு காட்டுவதா? என கேள்வி எழுப்பினார்.