தமிழ்நாடு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனரை கழற்றிய ஒருவர் உயிரிழப்பு

Rasus

தருமபுரியில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா பேனரை கழற்றிய அதிமுக தொண்டர்களை மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நல்லனஹள்ளியை சேர்ந்த அதிமுக தொண்டர்களான கணேசன், முருகன், இருவரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, பெங்களூர் பிரதான சாலையில் வரவேற்பு பேனர் வைத்திருந்தனர். விழா முடிந்த பின்னர், பேனரை கழட்டிய போது மின்சாரம் தாக்கியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முருகன் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.