தமிழ்நாடு

வாட்டர் ஹீட்டரை ஆன் செய்துவிட்டு தாய் அலட்சியம் : குழந்தைக்கு நேர்ந்த பரிதாப முடிவு

webteam

வாணியம்பாடி அருகே வாட்டர் ஹீட்டரில் கை வைத்த குழந்தை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு  அனன்யா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது. இவர்கள் அனைவரும் ஆம்பூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து புருஷோத்தமன் கடந்த 10 நாட்களாக தனது தாய் வீட்டில் தங்கியிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பவித்ரா குடத்தில் தண்ணீரை சூடு
படுத்துவதற்காக மின்சார வாட்டர் ஹீட்டரை ஆன் செய்து விட்டு சமையலறையில் இருந்துள்ளார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை அனன்யா குடத்தில் கை வைத்துள்ளார்.

இதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.