தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு; 3049 பேர் டிஸ்சார்ஜ் !

jagadeesh

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 88 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 3,049 பேர் குணமாகி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 3,049 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,13,856 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,219 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2,403 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.