தமிழ்நாடு

பொருளாதாரத்தில் நாட்டின் 2வது பெரிய மாநிலம் தமிழகம்: ஓபிஎஸ் பேச்சு!

webteam

பொருளாதார ரீதியாக நாட்டின் 2வது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்குவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தனியார் வர்த்தக அமைப்பு சார்பில் முதலீட்டாளர்களின் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆசியாவில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகம் 3வது இடத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்திய அளவில் அதிக தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறையில் சுமார் 20 லட்சம் வேலைவாய்ப்புகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் 2014-15 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 104 சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு தழுவிய அளவில் இது 32.04 சதவிகிதம் ஆகும். சிறு, குறு தொழில்கள் பதிவு செய்யப்பட்டதில் தமிழகம் முதலிடமாக இருக்கிறது” என்றும் ஓபிஎஸ் கூறினார்.