தமிழ்நாடு

அரசு வீட்டை காலிசெய்தார் ஓ.பன்னீர்செல்வம்

அரசு வீட்டை காலிசெய்தார் ஓ.பன்னீர்செல்வம்

Rasus

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் வீடு மாறியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் வாடகை வீட்டில் அவர் குடியேறினார்.

ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது அரசு சார்பில் அவருக்கு கீரின்வேஸ் சாலையில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்த பிறகு, ஒரு மாதத்தில் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் வாடகைக்கு குடியேறியுள்ளார். இந்த வீடு குடிபுகும் நிகழ்ச்சியில் அவரது மகன்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். இனி, இந்த வீட்டிலிருந்துதான் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.