தமிழ்நாடு

என்எல்சி தொழிற்சங்கங்களின் அங்கீகார தேர்தல் : தொமுச, அண்ணா தொழிற்சங்கம் தேர்வு

Veeramani

நெய்வேலி என்எல்சி நிறுவன தொழிற்சங்கங்களின் அங்கீகார‌‌த்திற்காக நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில், தொமுச, அண்ணா தொழிற் சங்கம் ஆகிய இரு சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களைத் தேர்வு செய்வதற்காக கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு எதிரான உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் , தொமுச மற்றும் அண்ணா தொழிற்சங்கம் ஆகியவை அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.