திருமயம் அருகே புளிய மரத்தில் தொங்கிய கட்டை பையிலிருந்து பிறந்து மூன்று நாள் ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளங்குடிபட்டியில் அய்யனார் கோயில் முன்பு உள்ள புளிய மரத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.
அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது பிறந்த மூன்று நாள் ஆன பெண் குழந்தையை ஜவுளிக்கடை கட்டை பையில் வைத்து மரத்தில் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தையின் உடல்நலம் குறித்தும் சிகிச்சை அளிப்பது குறித்து தொடர்பாக சைல்டு லைன் அமைப்பினர் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து நமணசமுத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.