தமிழ்நாடு

கந்துவட்டி கொடுமையால் தீக்குளிப்பு: உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு

rajakannan

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்தனர். இதில் காயமடைந்த 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தா‌ன நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, மகள் மதிசரண்யா, ஒன்றரை வயது குழந்தை என நால்வர் தீக்குளித்தனர்.

இவர்கள் நால்வரும் பலத்த தீக்காயத்துடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சுப்புலட்சுமி, 5 வயது குழந்தை மதிசரண்யா, மற்றொரு ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர். கணவர் இசக்கிமுத்துவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.