தமிழ்நாடு

நீட் தேர்வு எதிரொலி - ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

webteam

அ‌ரியலூர் ரயில் நிலையத்திற்கு வெடி குண்டு வைக்கப்படும் என  மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை அரியலூர் ரயில் நிலையத்தில் மாதம் ஒரு ரயில் குண்டு வைத்து தகர்க்கப்படும் என ரயில்வே மேலாளருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இந்த மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஏராளமான ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரியலூர் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.