திருமாவளவன் எம்பி pt web
தமிழ்நாடு

முக்கிய தலைவர்களுக்கு ஆபத்தா? “உளவுத்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்” - திருமாவளவன் எம்.பி

PT WEB

தமிழ்நாட்டில் எந்தெந்த தலைவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை உளவுத்துறை கண்டறிந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என நம்புவதாக குறிப்பிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலே தொடக்கத்திலேயே வலியுறுத்தினோம். இன்றைக்கு அது வெளிப்படையாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது.

இன்னும் பின்னணியில் இருந்து திட்டமிட்டவர்கள் யார்? ஏவியவர்கள் யார்? பொருள் உதவிகளைச் செய்தவர்கள் யார் என்பது வரையில் காவல்துறையினர் கண்டுபிடித்து அவர்களை தண்டிப்பார்கள் என நம்புகிறேன். உளவுத்துறை கண்டறிந்து யாருக்கு பாதுகாப்பு தேவையோ, அந்த அடிப்படையில் உரியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.