தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 2,320 விநாயகர் சிலைகள் கரைப்பு

Rasus

சென்னையில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 320 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை முழுவதும் 2 ஆயிரத்துக்கு 500-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டன. சென்னை கொட்டிவாக்கம், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 320 சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை ஊர்வலம் சென்ற பாதை முழுவதும் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். சிலைகள் கரைக்கப்படும் கடல் பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். சிலைகள் கரைக்கப்படும் 2-ஆவது நாளான இன்றும் ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்ட வழியிலேயே செல்ல வேண்டும் என்றும், ஊர்வலம் செல்லும் பாதைகளில் அப்போதைய நிலையை பொறுத்து போக்குவரத்து மாற்றம்
செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.