தமிழ்நாடு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள முருகனின் சலுகைகள் ரத்து

webteam

ராஜீவ்காந்தி கொ‌லை வழக்கில் சிறையில் உள்ள முருகனுக்கு அளிக்கப்பட்டு‌ வந்த சலுகைகள் 3 மாதத்திற்கு ரத்து‌ செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனின் அறையில், கடந்த வெள்ளியன்று நடத்தப்பட்ட சோதனையில், ஒரு செல்போன், சிம்கார்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. சிறை விதிகளை மீறியதாக, பாகாயம் காவல் நிலையத்தில் முருகன் மீது ஒரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முருகன் உயர்பாதுகாப்பு பிரிவு 3-ல் இருந்து ஒன்றிற்கு மாற்றப்பட்டார். 

இந்நிலையில், முருகனுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறைச்சலுகைகள் 3மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 15 நாட்களுக்கு ஒருமுறை ‌நடைபெறும் நளினி-முருகன் சந்திப்பு, கடிதப் போக்குவரத்து, பார்வையாளர்கள் சந்திப்பு ஆகியவையும் ரத்து‌ செய்யப்படுகின்றன.