தமிழ்நாடு

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் நகரும் நியாயவிலைக் க‌டைகள்

jagadeesh

தமிழ‌கத்தில் நாளை மறுதினம் முதல் நகரும் நியாயவிலைக் கடைகள் செயல்படத் தொடங்கும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிவித்தபடி 3‌ ஆயிரத்து 501 நகரும் நியாய விலைக் கடை‌களை முதல‌மைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை காலை ‌9 மணியளவில் தொடங்கி ‌வைக்கவுள்ளார்.‌

இதனையொட்டி ‌நடைபெறும் விழாவுக்கென தனியாக குழு அமைக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யயப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க தேவையின்றி அதிக‌ தொலைவு செல்வதை தவிர்க்க வேண்டும் ‌என்ற எண்ணத்தில் நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படுகின்றன.