தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு ஆய்வுசெய்ய அமைச்சர்கள் குழு

Sinekadhara

மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் பயிர்சேதம் ஏற்பட்டு விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில் மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ரகுபதி, அன்பில் மகேஷ், மெய்யநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.