தமிழ்நாடு

மத்திய அரசின் திட்டங்கள் விரைவு படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

webteam

மத்திய அரசின் திட்டங்களை விரைவுபடுத்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “பல்வேறு மாற்றங்களை உருவாக்கவும், மத்திய அரசின் பொதுத் தேர்வுகள், ஸ்மார்ட்கார்டு, ஸ்மார்ட் வகுப்பு உள்ளிட்டவைகளை விரைவு படுத்தவும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்காக பல்வேறு நிறுவனங்கள் வருகை தந்துள்ளன. அவற்றின் ஆலோசனையை பெற்று மிக விரைவில் பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். வெயிட்டேஜ் முறைக்காக ஆய்வுக்குழு அமைக்கவுள்ளோம், குழுவின் பரிந்துரையை பெற்று வெயிட்டேஜ் முறை குறித்த முடிவுகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.