தமிழ்நாடு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: திருவள்ளூரில் சைக்கிள் பேரணி

webteam

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி சைக்கிள் பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வரும் 2-ஆம் தேதி அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்க உள்ளார். இதற்காக அரசு சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தச்சூர் கூட்டு சாலையில் நூற்றாண்டு விழாவிற்காக சைக்கிளில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இதனை திருவள்ளூர் எம்பி வேணுகோபால், மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, பொன்னேரி எம்எல்ஏ பலராமன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். தச்சூர் கூட்டு சாலையிலிருந்து புறப்பட்ட பேரணி, கிருஷ்ணாபுரம் பகுதியில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.