தமிழ்நாடு

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Sinekadhara

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தற்போதுவரை உதகையில் 4 செ.மீ, கிருஷ்ணராயபுரத்தில் 3 செ.மீ, பேரையூர், கலட்டி, நிலக்கோட்டையில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.