தமிழ்நாடு

மீண்டும் மெரினாவில் போராட்டம்?

webteam

மெரினாவில் போராட்டம் நடைபெற இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றது. போராட்டத்தின் இறுதியில் வன்முறை வெடித்தது. இதனால், மெரினா கடற்கரைப் பகுதியில் போராட்டம், பேரணி நடத்த சென்னை மாநகர காவல்துறை தடை விதித்தது. இந்தநிலையில், டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் மெரினாவில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து கலங்கரை விளக்கம் முதல் அண்ணா சதுக்கம் வரையிலான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.